Published on 10 Dec 2020

Ms Sushma Soma, NIE music lecturer emerged as one of the Young Artist Award recipients

NIE music lecturer Ms Sushma Soma is one of the Young Artist Award recipients who is counting her blessings in the pandemic year.

இந்த ஆண்­டுக்­கான இளங்­க­லை­ஞர் விரு­தைப் பெற்ற நான்கு வள­ரும் கலை­ஞர்­களில் கர்­நா­டக இசைக் கலை­ஞர் சுஷ்மா சோம­சே­க­ரும் ஒரு­வர்.

சிங்­கப்­பூ­ரின் மிக உய­ரிய கலை, இலக்­கிய விரு­தான கலா­சார பதக்­கம், பாத்­திக் ஓவி­யக் கலை­ஞ­ரான 80 வயது திரு சர்­காசி, பல்­லூ­டக ஓவி­யக் கலை­ஞ­ரான 59 வயது டாக்­டர் வின்­சென்ட் லியாவ் ஆகிய இரு­வ­ருக்­கும் இவ்­வாண்டு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்­து­லக அங்­கீ­கா­ரம் பெற்ற கலை­ஞ­ரான 33 வயது திரு­மதி சுஷ்மா, ஆய்­வா­ளர், கல்­வி­யா­ளர், எழுத்­தா­ளர் என பல பரி­மா­ணங்­க­ளைக் கொண்­ட­வர். ஐந்து வயது முதல் வாய்ப்­பாட்டு இசை­யில் ஈடு­பட்­டுள்ள இவர், சென்­னை­யில் ‘தி மெட்­ராஸ் மியூ­சிக் அகெ­டமி’, ‘தி பவன் லண்­டன்’, பிர­சல்­சி­லுள்ள இந்­திய தூத­ர­கம் போன்ற இடங்­களில் கச்­சேரி செய்த பெரு­மை­யைப் பெற்­ற­வர்.

“கர்­நா­டக இசைக்­க­லைக்கு அங்­கீ­கா­ர­மும் மரி­யா­தை­யும் கிடைக்­கும் வித­மாக இந்த விருது அமைந்­துள்­ளது,” என தமிழ் முர­சி­டம் கூறிய சுஷ்மா, தம்மை ஒரு சிறந்த கலை­ஞ­ராக உரு­வாக்­கிய தமது குடும்­பத்­தி­ன­ருக்­கும் குரு ஆர் கே ஸ்ரீராம் குமார், பாக்­யா­மூர்த்தி ஆகி­யோ­ருக்­கும் நன்றி தெரி­வித்­தார்.

கணக்­கி­யல் துறை பட்­ட­தா­ரி­யான சுஷ்மா, இசை மீது கொண்ட ஆர்­வத்­தி­னால் முழு நேரக் கலை­ஞ­ராக பரி­ண­மித்து வரு­கி­றார்.

ஓவி­யக் கலை­ஞர் டாக்­டர் யான்­யுன், 34, ஆங்­கில மலாய் நாட­கக் கலை­ஞர் இர்­ஃபான் கஸ்­பான், 33, திரைத்­து­றைக் கலை­ஞர் நிக்­கல் மிடோரி ஊட்­ஃபர்டு, 34, ஆகி­யோர் இவ்­வாண்டு இளங்­க­லை­ஞர் விருது பெறும் ஏனை­ய­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இளம் கலை­ஞர்­களை ஊக்­கு­வித்து வளர்க்­கும் நோக்­கில் 1992ல் தொடங்­கப்­பட்ட இந்த தேசிய விருதை இவ்வாண்டுடன் 163 பேர் பெற்­றுள்­ள­னர். நிகழ்­க­லைக் கலை­ஞர் டாக்­டர் எஸ்.சந்­தி­ர­சே­க­ரன், நட­னக் கலை­ஞர்­கள் நிர்­மலா சேஷாத்­திரி, மீனாட்சி பாஸ்­கர், தமிழ்­வா­ணன் விஷ்ணு, இசைக் கலை­ஞர்­கள் கான­வி­னோ­தன் ரத்­னம், அர­விந்த் குமா­ர­சாமி ஆகி­யோர் இவ்­வி­ரு­தைப் பெற்ற ஏனைய தமிழ்க் கலை­ஞர்­கள். உன்­னத கலை ஆற்­றல் பெற்ற 35 வய­தும் அதற்­கும் குறைந்­த­வர்­க­ளுக்கு இவ்­வி­ருது வழங்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கலை, கலா­சார மேம்­பாட்­டுக்கு பங்­க­ளித்த தலை­சி­றந்த கலை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­படும் கலா­சார பதக்­கம் 1979ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. இது­வரை 128 கலை­ஞர்­கள் இவ்­வி­ரு­தைப் பெற்­றுள்­ள­னர்.

இதே பகுதியைச் சேர்ந்த மற்ற செய்திகள்

Read the original article here.

Source: Tamil Murasu © SPH Media Limited. Permission required for reproduction. 

Media coverage